logo
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி செய்து காப்பாற்றிய காவலருக்கு, எஸ்பி பாராட்டு

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி செய்து காப்பாற்றிய காவலருக்கு, எஸ்பி பாராட்டு

25/Jul/2021 01:48:19

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை முதலுதவி செய்து காப்பாற்றிய காவலருக்கு, எஸ்பி பாராட்டுச் சான்றளித்தார். 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் உள்கோட்டம், உடையாளிப்பட்டி காவல் சரகம், உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே 23.07:2021-ஆம் தேதி, மின் கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த குன்றாண்டார் கோவில், ஆழ்வான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (25) என்பவர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்.

 தகவலறிந்து அங்கு வந்த, உடையாளிப்பட்டி காவல் துறையினர்,  பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கி, மயக்க நிலையில் இருந்தவருக்கு, காவலர் வெள்ளைச்சாமி என்பவர் தக்க நேரத்தில் CPR முறையில், முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

உரிய நேரத்தில் சம்யோஜிதமாக செயல்பட்டு முதலுதவி செய்து இளைஞரின்  உயிரைக் காப்பாற்றிய காவலர் வெள்ளைச்சாமியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்,  நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்

Top