logo
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு அனைத்து கட்சியினரும் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு அனைத்து கட்சியினரும் மரியாதை

04/Aug/2021 11:36:37

ஈரோடு, ஆக: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216- ஆவது நினைவு நாளையொட்டி அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி , ஈரோடு அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் ஆடிப்பெருக்கு 216 -ஆவது நினைவு நாள் ஆடிப்பெருக்கு விழா அரச்சலூர் அடுத்த நிலையில் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மாவட்ட ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பழனிச்சாமி, துணைச் செயலாளர்கள் செந்தில்குமார்,

சின்னையன், மாவட்ட விவசாயப் பிரிவு அமைப்பாளர் சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கொடுமுடி சின்னசாமி, மொடக்குறிச்சி தெற்கு விஜயகுமார், மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜ., கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், ஓபிசி தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழனிச்சாமி, மாநகர் மாவட்ட தலைவர் ரவி, மக்கள் ராஜன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 கொமதேக கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்எல்ஏ-வுமான ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Top