logo
கோவிட் தடுப்புப்பணி: அரசு மருத்துவமனைகளில்மருத்துவம்சாரா தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவிட் தடுப்புப்பணி: அரசு மருத்துவமனைகளில்மருத்துவம்சாரா தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

23/Jul/2021 09:49:16

புதுக்கோட்டை, ஜூலை: அரசு மருத்துவமனைகளில் கோவிட் -19 தடுப்புப்பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்களுக்கு தற்காலிகமாக (6 மாதங்களுக்கு) தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.


 இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிட் - 19 தடுப்புப்பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்கள் (மருந்தாளுநர் -10, நுண்கதிர் வீச்சாளர் -10 மற்றும் ஆய்வுக் கூட நுட்புநர் -10) பட்டய படிப்பு 2 ஆண்டுகள் முடித்தவர்களிடமிருந்து ஆறு மாதங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனங்களுக்கு  விண்ணப்பிக்கலாம்.


இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது, வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணை  இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், சாந்தநாதபுரம் 1-ஆம் வீதி, புதுக்கோட்டை 622001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் 28.07.2021 மாலை 5 மணி ஆகும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.   புதுக்கோட்டை இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் அலுவலகத்தில் 31.07.2021 அன்று காலை 10 மணிமுதல் நேர்முகத் தேர்வு நடைபெறும். 

Top