23/Jul/2021 07:45:55
புதுக்கோட்டை, ஜூலை:புதுக்கோட்டையில் நடைபெற்ற பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க விழாவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், கல்வியாளர், சமூகஆர்வலர், செவிலியர் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை ஏஎன்எஸ் ஹாலில் நடைபெற்ற நிர்வாகிகள் பணியேற்புவிழாவுக்கு பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் டாக்டர் பி தனசேகரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் தேர்வு ஆனந்தஜோதிராஜ்குமார் 2021-22 ம் ஆண்டின் புதிய தலைவர் துரைமணி,செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக, காரைக்குடி அழகப்ப கல்லூரி முன்னாள் துணைவேந்தர் சொ .சுப்பையா பங்கேற்று மருத்துவர் மருத்துவர் தனசேகரன், சுபாஷ்காந்தி, சரவணன்,அரவிந்த்குமார்,கே சரவணன், கார்த்திக், தெய்வநாயகம் ,கேசவபாலாஜி சமூகஆர்வலர் பெல் என்ற சுப்பிரமணியன், கல்வியாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி, செவிலியர்கள் இந்திராகாந்தி தேன்மொழி ,தனலெட்சுமி, விஜயா ராஜேந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
புதிய உறுப்பினராக இணைந்து கொண்ட கவியரசன் ,சத்தியமூர்த்தி, பிரபாகரன், நெல்சன், லெட்சுமணன் பிரபு, ரஜித்அலி ,வைத்தியநாதன்,சிவானந்தம்,வெங்கடேஷ்,பிரம்மராஜன்,ராஜ் குமார் ஆகியோருக்கு ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி ரோட்டரி -பின்- அணிவித்து சான்று வழங்கினார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி, ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் முருகப்பன், துணை ஆளுநர்கள் ஆர். கருணாகரன், சிவாஜி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக மறைந்த துணை ஆளுணர் முத்துசாமி உருவப்படத்தை ஆளுநர் தேர்வு ஆனந்த ஜோதிராஜ்குமார் திறந்துவைத்தார். செயலாளர் செந்தில் வரவேற்றார். நிறைவாக புதிய செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார். முன்னாள்தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.