22/Jul/2021 09:57:51
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 1.85 கோடி நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் கொரோனா (பொது) நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 661 ரூபாய்க்கான வங்கி வரைவோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை மனு வழங்கி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும், கொரோனா நிதி வழங்கிய போது, உடன் சென்ற மாவட்ட செயலாளர்களும் முதல்வரை நேரில சந்தித்து வாழ்த்துத்தெரிவித்தனர். இந்நிகழ்வில் நிர்வாகிகளுடன் உடன் இருந்து சிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் மாநில அமைப்பினர் நன்றி தெரிவித்தனர் .