logo
ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எரித்து கொலை- போலீஸார் விசாரணை

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எரித்து கொலை- போலீஸார் விசாரணை

21/Jul/2021 11:01:17

ஈரோடு, ஜூலை:ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தின் ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில்  எரிந்த ஆண் சடலம் ஒன்று கிடந்தது. 

இது குறித்து, அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், இறந்தவர் ஈரோடு அடுத்துள்ள சுண்ணாம்புஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த அசேன்சேட்டு(52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன்சேட்டு தலையில் கல்லை போட்டதோடு எரித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சசி மோகன் , ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

Top