03/Oct/2020 05:18:36
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வெளி மாவட்டத்தில் இருந்து அரிசி கோதுமை நெல் இறக்குமதி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்திற்காக இன்று(அக்.3) திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 20 பெட்டிகளில் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலைய பணிமனைக்கு வந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அறவை ஆலைகள் மூலம் அரிசியாக்கி, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.