06/May/2021 03:22:12
ஈரோடு, மே: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து அந்தியூரில் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன்
கோவில் எதிரில் அந்தியூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மேற்கு
வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய
திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரையும், முதல்வர் மம்தா பானர்ஜியையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர்
அஜித்குமார் தலைமை வகித்தார். அந்தியூர் ஒன்றிய
பொதுச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரசார பிரிவு செயலாளர் ஏபிஎஸ் பற்குணன் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ், பட்டியலின மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அதிபன் தயாநிதி, மாவட்ட செயலாளர் சந்திரன் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.