21/Jul/2021 01:03:13
புதுக்கோட்டை, ஜூலை: நடப்பு 2021-2022-ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியின் 750-ஆவது மாணவராக சு.சஞ்சனா ஒன்றாம் வகுப்பிலும், 751-ஆவது மாணவராக பி. யுவன் நான்காம் வகுப்பிலும் (19.7.2021) பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பள்ளியின் கிராமக் கல்விக்குழுத் தலைவரும் புதுக்கோட்டை நகர்மன்றமுன்னாள் துணைத் தலைவருமாகிய எஸ்.ஏ.எஸ்.சேட் (எ) அப்துல் ரஹ்மான்,பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்க புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்பெற்றோருமாகிய புதுகை செல்வா ஆகியோர் இரண்டு மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்களை வழங்கி வாழ்த்தினர். மாணவர்கள் இருவரையும் சேர்த்து நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது 270 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது .
கடந்த 2016-2017-ஆம் கல்வியாண்டில் 122 ஆக இருந்த பள்ளியின்மாணவர் எண்ணிக்கை, 2017-2018-ல் 128. 2018-2019-ல் 201. 2019-2020-ல் 339. 2020 - 2021-ல் 516 என உயர்ந்து, தற்போது நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 750-ஐ கடந்து சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.