logo
திமுக பிரமுகர் மீது நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல் புகார்: ஈரோடு  மாவட்ட எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் மனு

திமுக பிரமுகர் மீது நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல் புகார்: ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் மனு

19/Jul/2021 11:37:13


ஈரோடு, ஜூலை, திமுக பிரமுகர் நிலத்தைஅபகரித்து, கொலை மிரட்டல்   விடுப்பதாகக்கூறி பாதிக்கப்பட்டவர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜிக்கு சொந்தமான ஈரோடு மாவட்டம், ஆசனுர் பகுதியில்  5 அறைகளுடன் கூடிய 75 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். 

இந்த இடத்திற்கு அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தாரை மணியன் என்பருக்கு சொந்தமான 2.10 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்நிலையில் திமுக பிரமுகர் தாரை மணியன் தன்னுடைய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து பழனிச்சாமி தாரை மணியனிடம் கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுதாகக்கூறிஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடும் திமுக பிரமுகர் தாரை மணியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Top