logo
கொரோனாவால் பலியான நிருபர் குடும்பத்திற்கு நிவாரணம்: ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

கொரோனாவால் பலியான நிருபர் குடும்பத்திற்கு நிவாரணம்: ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

19/Jul/2021 12:10:08

ஈரோடு, ஜுலை: ஈரோட்டில் கொரோனாவால் பலியான வேந்தர் தொலைக்காட்சி நிருபர் ம. ராஜோந்திரன் குடும்பத்திற்கு நிவாரணம்  வழங்க வேண்டுமென ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் (வேந்தர்)தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த (ஜூலை15) வியாழக்கிழமை  உயிரிழந்தார். 

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மறைந்த செய்தியாளர் ராஜேந்திரனுக்கு இரங்கல் கூட்டம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு செய்தியாளர் ராஜேந்திரனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி  செலுத்தினார். 

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் படி  உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பதாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

இந்த இரங்கல் கூட்டத்தில்திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கேவி ராமலிங்கம், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, அரசு கேபிள் டிவி சேர்மன் குறிஞ்சி என் சிவகுமார்,  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி,,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கே.எஸ். தென்னரசு, முன்னாள் மேயர் குமார், முருகேஷ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.  ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்

Top