logo
புதுக்கோட்டை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினராக அழைப்பு

புதுக்கோட்டை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினராக அழைப்பு

18/Jul/2021 09:54:51

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா்களாக சேர பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மண்டலக் கூட்டுறவு சங்கங்களின்  இணைபதிவாளா் எம். உமா மகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினா்களாக சேர அதற்கான படிவத்தை அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூா்வ இணையதளமான www.pccbank.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சங்கங்கள் வழங்கும் சேவைகளைப் பெற்று விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Top