logo
திருவரங்குளத்தில் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஓட்டுனர்களிடயே தகராறு: போக்குவரத்து பாதிப்பு

திருவரங்குளத்தில் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஓட்டுனர்களிடயே தகராறு: போக்குவரத்து பாதிப்பு

15/Jul/2021 07:23:39

புதுக்கோட்டை,ஜூலை: புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஓட்டுனர்களிடயே தகராறு நேரம் தொடர்பான  தகராறில் ஈடுபட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,  திருவரங்குளம் வனப்பகுதியில் கரம்பக்குடி பகுதியில் இருந்து காலை நேரத்தில் அந்த இரண்டு தனியார் பேருந்துகள் நேரப்போட்டி காரணமாக  ஒருவரை ஒருவர் முந்தி  பிந்தி போட்டி போட்டுக் கொண்டு வேகமாகச் சென்றனராம். அப்படி  முந்திச் சென்ற   பேருந்து திருவரங்குளம் கடைவீதியில்  சாலையின் குறுக்கே  நிறுத்தி மற்றொரு பேருந்தை வழிமறித்தனர்.

இதையடுத்து இரு பேருந்து வாகன ஓட்டுனர்களும் நடத்துனர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது  நடைபெறுவது வழக்கம் . இதனால் ஆத்திரமடைந்த  ஊர்ப்  பிரமுகர்கள் இரண்டு பேருந்து வாகன ஓட்டுனர்களையும் எச்சரித்து  னுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து  பாதிப்பு  ஏற்பட்டது .

Top