logo
தோழர் என்.சங்கரய்யா(100) வயது : புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம்

தோழர் என்.சங்கரய்யா(100) வயது : புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம்

15/Jul/2021 06:13:28

புதுக்கோட்டை, ஜூலை: வாழும் வரலாறாகத் திகழும் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய, தமிழக அரசியலின் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகளின் சார்பில் 100-ஆவது அகவையை எட்டும் சங்கரய்யாவின் பிறந்தாநாள் எழுச்சியுடன் கொண்டாப்பட்டது. கட்சி மற்றும் அமைப்புகளில் கொடிகளை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் உழைப்பாளி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கிளைச் செயலாளர் பாண்டின் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சங்கரய்யாவின் பணிகளை குறித்து சிறப்புரையாற்றினார்.

 நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாள் எம்.ஏ.ரகுமான், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.ரத்தினவேல், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்;த்தனன் மற்றும் குமரேசன், சரவணன் வீராச்சாமி, மகதீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிஐடியு தொழில்சங்கம்:  கீரனூர் காந்திசிலை அருகே நடைபெற்ற கொண்டாத்திற்கு நகரச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் மற்றும் ஆறுமுகம், செந்தில், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி தலைமை நடைபெற்ற கொண்டாத்தில் சிஐடிய மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பச்சையம்மாள் மற்றும் நிர்வாகிகள் சவரியம்மாள், தனலெட்சுமி, சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Top