15/Jul/2021 01:23:14
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையப்பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (15.7.2021) காலை 9.00 மணிமுதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கந்தர்வக்கோட்டை செயற்பொறியாளர்(இயக்குதலும்-காத்தலும்) கே.ராஜ்குமார் வெளியிட்ட தகவல்:
ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், பதிபுரம், பெருங்களூர் தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல் மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வக்கோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி.
புதுப்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி.
பழைய கந்தர்வக்கோட்டை துணை நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரவம்பட்டி, மங்கனூர், வடுகபட்டி பி சனாத்தூர், துருசுப்பட்டி, மெய்குடிப்பட்டி, அக்கச்சிப்பட்டி. மங்களாகோவில் துணையின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.