logo
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்

28/Jun/2021 10:14:39

கரூர், ஜூன்:கரூர் மாவட்டத்திலுல்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்  ஆட்சியர் பிரபுசங்கர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்கை பணிகள் நடைபெற்று வருவதையும், பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சியர் .பிரபுசங்கர்  (28.06.2021) திங்கள் கிழமை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவ,மாணவியர் சேர்க்கையினை தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ,மாணவிகள் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளியணை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணி தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான வகுப்புகளுக்கு மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 666 தொடக்கப்பள்ளிகளும், 183 உயர்நிலைப்பள்ளிகளும், 93 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 1,061 பள்ளிகள் உள்ளது.

இதில் அரசுப்பள்ளிகளில் 79,753 மாணவ-மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 15,901 மாணவ-மாணவிகளும், தனியார் பள்ளிகளில் 73.793 மாணவ-மாணவிகளும் மொத்தம் 1.69,447 என மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.

இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளகளில் அதிக மாணவ-மாணவிகள் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும். பள்ளிகளில் ஏதேனும் அடிப்படை வசதிக்குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்படும்.

இன்றைய ஆய்வின்போது, 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம்  உரையாடியபோது, ஏன் முகக்கவசம் அணிந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு மிக அருமையாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து பதில் உரைத்தார். அந்த அளவிற்கு தமிழக அரசின் நடவடிக்கையால், 6-ம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டிருக்கின்றது.

பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்போதும், அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் நலனையும், ஆசிரியர்களின் நலனையும் காக்கும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கும் என்றார் ஆட்சியர் பிரபுசங்கர்.

 முன்னதாக, மாணவர்களிடம் படித்து எதிர்காலத்தில் என்ன பணிக்கு செல்ல விருப்பம்  என்று கேட்டபோது, மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அலுவலர், மருத்துவர் என ஒவ்வொருவரும் தங்களது  கனவுகளை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த ஆட்சியர்  அனைவருக்கும் பாடப் புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் அப்பள்ளியில் பயிலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகளின் அளவுகள் சரியாக உள்ளதா என  ஆட்சியர் ஆய்வுசெய்தார். இதில், முதன்மைக்கல்வி அலுவலர்  மகேஸ்வரி, வெள்ளியணை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்துச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Top