logo
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது

15/Jul/2021 12:45:32

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்களை போலீஸார்  கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வகோட்டை காவல் சரகத்தில் காவல் ஆய்வாளர்  தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரால்  நத்தமாடிபட்டி வீச்சுக்கருப்பு கோவில் அருகே  புதன்கிழமை(14.07.2021) இரவு வெட்டுசீட்டு விளையாடிக் கொண்டிருந்த பத்து நபர்களை கைது செய்தும் மற்றும் அவர்களது 7 இருசக்கர வாகனங்கள் அவர்களுடைய 5 செல்போன்கள்  ரொக்கம் ரூ. 14,090  கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top