11/Jul/2021 05:34:50
ஈரோடு, ஜூலை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா அவ்வப்போது ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பொது மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோடு மாநகர் பகுதிக்கு உட்பட்ட குமலன்குட்டை பகுதியில் 21 -ஆவது வார்டில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குமலன்குட்டையில் உள்ள அரசு பள்ளியில் 50- மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பழுதாகிக் கிடந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.வார்டு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.