logo

ஈரோட்டில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 441 பேருக்கு அபராதம் விதிப்பு

10/Jul/2021 01:34:11

ஈரோடு, ஜூலை:  தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 11-ஆம்தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 441 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சமூக இடைவெளியை பின்பற்றாத 27 பேருக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது. 52 மோட்டார் சைக்கிள்களும், 5 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறியவர்களிடம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் . விதித்து வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

Top