logo
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

08/Jul/2021 12:06:09

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ரேசன் அரிசி கடத்திய கணபதிபாளையத்தை சேர்ந்த வேலாயுதம், பவானிசாகரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்த மதியழகன், விஜயன், விஜய் என்கிற கேத்தீஸ்வரன் ஆகிய 4 பேரை கோபி போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதைத்தொடர்ந்து கோபி போலீசார் கணபதிபாளை யத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.அதில் 400 கிலோ எடையுள்ள 20 மூட்டை ரேசன் அரசி இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ரேசன் அரிசி கடத்திய அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம், பவானிசாகரில் உள்ள இலங்கை அகதி முகாமினை சேர்ந்த மதியழகன் , விஜயன் மற்றும்; விஜய் என்கிற கேதீஸ்வரன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 400 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Top