07/Jul/2021 10:43:10
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக 2021- 22 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் எம். ஏ .கிராண்ட் ஹோட்டலில் சங்கத் தலைவர் டாக்டர் க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2021-22 -ஆம் ஆண்டின் தலைவர் டாக்டர் கு.மாரிமுத்து சங்க புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். செயலாளர் பி.செல்லத்துரை ரோட்டரி பிரார்த்தனையை வாசித்தார்.
பட்டய தலைவர் க.நைனாமுகமது, மேனாள் தலைவர்கள் கண.மோகன்ராஜா,எஸ்.பார்த்திபன், ஜி..தனகோபால், அழகப்பன், மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வருங்கால தலைவர்கள் ஆர்.சிவக்குமார், டாக்டர் துரை, ஆர்.நாகரத்தினம், பொருளாளர் எம்.ஜபருல்லா, மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் விஆர்எம்..தங்கராஜ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பொருளாளர் எஸ்.செந்தில் வேல் செய்திருந்தார். அரசு வழிகாட்டுதலின்படி அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கூட்டம் நடைபெற்றது.