logo
கோபிசெட்டிபாளையம் அருகே தோட்டத்தில்  நாய்கள் கடித்ததால்  உயிரிழந்த மான் குட்டிகள்

கோபிசெட்டிபாளையம் அருகே தோட்டத்தில் நாய்கள் கடித்ததால் உயிரிழந்த மான் குட்டிகள்

06/Jul/2021 10:05:20

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகோ உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்த 3 மான் குட்டிகளை நாய் கடித்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  டி.என்.பாளையம் வனசரகததிற்கு உட்பட்ட பகுதிகளில் யானை,மான்,புலி,சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன,வன பகுதிகளில் ஏற்பட வறட்சி காரணமாக சில மாதங்களாக வன விலங்குகள் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் விவசாய நிலங்களை தேடி வந்து கொண்டுள்ளன.

இவ்வாறு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் காலனி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தின் வாழை,கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.அந்த தோட்டத்தில் முகாமிட்ருந்த புள்ளி மான்களில் 3 வயது மதிக்க தக்க ஒரு ஆண் மான் தாயை விட்டு பிரிந்து சென்றதால் அபகுதியில் உள்ள நாய்கள் கடித்து இறந்து போனது.


விவசாய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இறந்த கிடந்த மானை பரர்த்துள்ளார்.அதனை கண்ட அந்த ஊர் பொதுமக்கள் உடனே டி.என்.பாளையம் வனதுறையினருக்கு தகவல்  தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் புள்ளிமனை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்..

இறந்த குட்டியை இழந்த தாய் மான் குட்டிகளைத்தேடி  விவசாய தோட்டத்தில்  அலைமோதி வருகிறது.சுற்றிவரும் அந்த மான்களை பிடித்து வனப்பகுதில் விட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top