logo
சத்தியமங்கலம் பூ மார்க்கெட் இரண்டு மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் இரண்டு மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி

06/Jul/2021 01:11:03

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் இரண்டு மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும்  பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கர்நாடகா கேரளா மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு பூ மார்க்கெட் செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை  தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மீண்டும்  செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top