logo
ஈரோட்டில் ஒரே நாளில்  சமூக இடைவெளி பின்பற்றாத 136 பேருக்கு அபராதம்

ஈரோட்டில் ஒரே நாளில் சமூக இடைவெளி பின்பற்றாத 136 பேருக்கு அபராதம்

05/Jul/2021 12:59:10

ஈரோடு, ஜூலை:  ஈரோட்டில் ஒரே நாளில்  சமூக இடைவெளி பின்பற்றாத 136 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 40-ஆவது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 660 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக முக கவசம் அணியாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 136 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 183 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 180 இருசக்கரவாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று மட்டும் ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு -பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று   முதல் கூடுதலாக வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவு வாகனங்கள்  வரும் என்பதால் அனைத்து சோதனை சாவடியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Top