logo
ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க காவல்துறைக்கு கோரிக்கை

ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க காவல்துறைக்கு கோரிக்கை

02/Oct/2020 05:38:18

ஈரோடு மேட்டூர் சாலைய கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறை, கே.என்.வி. சாலையில் சென்ற  வாகனங்கள் மட்டும் மேட்டூர் சாலை வழியாக  அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சத்தி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஈரோடு நாசியப்பா வீதி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால், முனிசிபல் காலனி  இடையன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மக்கள் கூடுதலாக நான்கு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளதுநாச்சியப்பா வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் நாச்சியப்பா  வீதியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஈரோடு  பேருந்து  நிலையத்திலிருந்து சவிதா சாலை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. நாச்சியப்பா வீதிப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் கடைகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்  சாலையைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நாச்சியப்பா நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி  வந்தார். எனினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், எஸ்.பி. அலுவலகத்தில் கோட்டை பொது மக்கள் நலச் சங்கம் சார்பில் நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் சரி செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவதுஈரோடு நாச்சி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் கனரக லாரிகள் தொடர்ச்சியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன எங்க பகுதியில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் ரேஷன் கடை மார்க்கெட் அன்றாட பணிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சாலையை கடந்து செல்ல முடியவில்லை. எனவே, மாவட்ட எஸ்.பி குறித்து நேரடியாக ஆய்வு செய்து மாற்று ஏற்பாடு செய்து போக்குவரத்தை சீரமைக்க பொது மக்களுக்கு உதவ  முன் வர வேண்டும்.

Top