logo
மகாத்மா காந்தியின் 152 -வது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியின் 152 -வது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

02/Oct/2020 05:30:13

ஈரோடு: மகாத்மா காந்தியின் 152- வது பிறந்த நாள் விழா மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் அரசியல் கட்சியினர் காந்தி மற்றும் காமராஜர் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி  உருவச்சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ஈ. பி. ரவி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு குமரேசன், மண்டலத் தலைவர் அம்புலி, வட்டாரத் தலைவர் நட்ராஜ், பொதுச் செயலாளர்கள் கனகராஜ் வின்சென்ட், சிறுபான்மை பிரிவு நிர்வாகி கே.என்.பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,  அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி, காமராஜர் உருவப் படங்களுக்கு  தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம். பழனிச்சாமி, துணைத் தலைவர் செல்வம் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தளபதி ரமேஷ்,இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆரிப் அலி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  நடைபெற்ற காந்தி பிறந்த நாளையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாகிகள் மணி, அரபிக், பிரபாகரன், வட்டாரத் தலைவர் புவனேஷ், ராம் லட்சுமணன், கண்ணம்மாள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாநகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாநில துணை பொதுச்செயலாளர் த.பா. பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர் பிரபு முன்னாள் மாவட்ட செயலாளர் அருள்மொழி, உழவர் பேரியக்கம் மாநில துணை செயலாளர் பெருமாள் மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ் பொறுப்பாளர்கள் பழனிவேல் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


Top