02/Oct/2020 08:33:28
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதன் பயனாக கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150 லிருந்து 100 க்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை வரை 1 லட்சம் எண்ணிக்கையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல் கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை சிறந்த முறையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை காக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்