logo
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

26/Jun/2021 06:22:09

சென்னையில் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர்கள். 12 வயதுக்குள் விளையாட்டு வீரர்களின் திறமையை நாம் அடையாளம் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது மகிழ்ச்சி. ஏற்கெனவே வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வீரர்களுக்கும் அந்த ஊக்கத் தொகை தற்போது வழங்கப்படுகிறது.

உலக அரங்கில் விளையாடும் வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடியும் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடியும் தமிழக அரசால் வழங்கப்படும்.

தமிழக வீரர்களே சென்று வருக, தரணியை வென்று வருக என்று பேசினார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறு விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.

Top