logo
பொன்னமராவதி  பகுதியில் 3 நாள்களுக்கு மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

பொன்னமராவதி பகுதியில் 3 நாள்களுக்கு மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

02/Oct/2020 11:42:08

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் அக்- 2, 5, 7 ஆகிய தேதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேலத்தானியம் பகுதியில் சடையம்பட்டி, ஒலியமங்கலம், சுந்தம்பட்டி, மங்கனூர், வெள்ளைக்கவுண்டன்பட்டி, வேங்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் டவர் லயன் கம்பி வேலைகள் நடைபெறுவதால் அக்டோபர் மாதம் 3,5,7  ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன்  வெளியிட்ட  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்..

Top