24/Jun/2021 07:05:12
கோவேக்சின் தடுப்பூசியை சில வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு விரைவில் முடிவு காணும் வகையில் சுகாதாரத் துறை செயலருக்கு கடிதம் எழுத தலைமைச் செயலருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கோவேக்சின் தடுப்பூசி குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.