logo
நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

18/Jun/2021 01:07:10

சென்னை: விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக் கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மழை யில் நனைந்து நெல் வீணாவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்க ல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகி யோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் அறிக்கை தாக்கல் செய்தாா்.

அதில், நெல் கொள்முதலுக்காக 468 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். இந்த குடோன்கள் படிப்படியாக மேம் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை யை பதிவு செய்த நீதிபதி கள், கொள்முதல் நிலையங்கள், தொலை தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையி லும், அவா்களின் போக்குவரத்து செலவு, அலை ச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

அப்போது பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா், இதுதொடா்பாக அண்மையில் நடை பெற்ற கூட்டத்தில், விவசாயிகளின் விளை நிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள் முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக தெரிவித்தாா்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து வெகு தூரங் களில் உள்ள சிறிய விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்ய எடுத்த நடவ டிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். 


Top