logo
புதுக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் கைது

புதுக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் கைது

23/Feb/2021 06:21:30

புதுக்கோட்டை, பிப்: பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 300 -க்கும் மேற்பட்டோரை போலீஸாார் கைது செய்தனர்.



கோரிக்கைகள்: தமிழக அரசின் நிரந்தர திட்டத்தில் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையை பணிக்கொடை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணம் பலன்களை ஓய்வுபெறும் நாளிலே வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் அன்னபூரணம் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 -க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Top