logo
  ரஜினி தலைமையிலான ஆன்மிக அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம்- அர்ஜுன்சம்பத் பேட்டி

ரஜினி தலைமையிலான ஆன்மிக அரசியல் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம்- அர்ஜுன்சம்பத் பேட்டி

01/Oct/2020 03:47:27

ஈரோடு: ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

ஈரோட்டில் ராமகோபாலன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு  அர்ஜுன் சம்பத்  அளித்த பேட்டி:ஆன்மீகம் தேசியத்திற்காக பாடுபட்ட ராமகோபாலுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும், தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும்.  கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் செயல்பட்டு கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து அவமதித்து வருவது குறித்து  தமிழக முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் சிறப்பான திட்டம் என்றும் இந்த திட்டம் குறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு பரப்பி வந்தனர்.அதனை முறியடித்து திட்டம் தற்போது  செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மீக அரசியல் அணியை உருவாக்கி வெற்றி பெற வைக்க இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடத்தப்படும். ஆன்மீக அரசியல் என்பது வளர்ச்சி ஊழலற்ற ஆட்சி ஆகும். அதிமுகவில் உட்கட்சி பூசல் கிடையாது திமுகதான் தூண்டி விடுகிறது என்றார்.

Top