13/Jun/2021 07:42:37
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (14.6.2021) திங்கள்கிழமை முதல் இயங்கும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக மதுபானக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். மதுபானக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கையுறை, முககவசம் மற்றும் கிருமிநாசினி தவறாமல் பயன்படுத்த பயன்படுத்த அறிவுறுத் தப்படுகிறது.
மதுபானக்கடைகளில்
சமூக இடைவெளி பின்பற்றுவதற்காக தடுப்பு வேலி
தவறாமல் பயன்படுத்த வேண்டும். இந்த தடுப்பு வேலிக்குள் வாடிக்கையாளக்கள் 6 அடி இடைவெளியில் 1 மீட்டர் வட்டத்திற்குள் நிற்கும் வண்ணம் வட்ட வடிவிலான 50 அடையாளங்கள் 200 அடி தூரத்திற்கு ஏற்படுத்த வேண்டும்.
மதுபானக்கடைகளில்
அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு ஒரு வரிசையில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள்
இந்த தடுப்பு வேலிக்குள் வந்து மதுபானங்கள் பெற்று
செல்ல வேண்டும். 200 அடி தூரத்திற்கு தடுப்பு
வேலி அமைக்க போதுமான போதிய இடவசதி இல்லாத இடங்களில் போதுமான வட்ட அடையாளங்கள் வரைய அறிவுறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தி்ல் மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாவட்ட எல்லைப்பகுதியில்
உள்ள 18 கடைகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, கூடுதலாக விற்பனை கவுன்ட்டர்கள்
6 அடி இடைவெளியில் அமைக்கப்பட்டு காவல்துறையினர் மூலம் கூட்டத்தினை கட்டுப்படுத்திட
அறிவுறுத்தப்படுகிறது.
மதுபானக்கடைகளில்
கிருமிநாசினி தெளிப்பதோடு மட்டுமல்லாமல் கடையின் வெளிப்புறம் மற்றும் சுற்றுப்பறத்தில்
பிளீச்சிங் பவடர் தினசரி 2 முறை தெளித்து கடைப்பணியாளர்கள்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் டோக்கன் முறை பின்பற்றப்பட்டு
கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவறுத்தப்படுகிறது.