logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

10/Jun/2021 06:36:17

ஈரோடு, ஜூன்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  எஸ்.டி.பி.. கட்சி சார்பில்  நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு ஜானகி அம்மாள் லே- அவுட் பகுதியில் நடந்த  ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு ஸ்கூட்டரை சாய்த்துப்போட்டு  அதற்கு மாலை அணிவித்து  நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன்  டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும்  முழக்கமிட்டனர்.

இதில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க மாநில பொருளாளர் ஹசன்பாபு, எஸ்.டி.பி.. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் முஹசின் காமினூன், துணைத்தலைவர் குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர்கள் பவானி முஹம்மது அகில், புளியம்பட்டி சுலைமான், பொருளாளர் முகமது யூஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமுசாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


ஈரோடு மாவட்ட .என்.டி.யு.சி. அலுவலகத்தில் தமிழ்நாடு .என்.டி.யு.சி. முன்னாள் தலைவர் ஜி.காளன் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி மாவட்ட தலைவர் கே.ஆர்.தங்கராஜு தலைமையில் நடந்தது. காளன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் கே.ராமசாமி, மகளிர் பிரிவு செயலாளர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Top