logo
டிச.8 -இல் நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு  தள்ளி வைப்பு

டிச.8 -இல் நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு தள்ளி வைப்பு

07/Dec/2020 06:21:57

சென்னை: நாளை (டிச.8) நடைபெறவிருந்த சி.ஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷன் தேர்வு தாள் - 1 நடைபெற இருந்தது. இந்நிலையில், இத்தேர்வு  வருகிற 13 -ஆம் தேதி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.டிசம்பர் 13 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்திதேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Top