07/Dec/2020 06:21:57
சென்னை: நாளை (டிச.8) நடைபெறவிருந்த சி.ஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷன் தேர்வு தாள் - 1 நடைபெற இருந்தது. இந்நிலையில், இத்தேர்வு வருகிற 13 -ஆம் தேதி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.டிசம்பர் 13 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்திதேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.