logo
ஈரோட்டில் ஒரே கடையை குறிவைத்து 3 -ஆவது முறையாகத் திருட முயற்சி

ஈரோட்டில் ஒரே கடையை குறிவைத்து 3 -ஆவது முறையாகத் திருட முயற்சி

17/Oct/2020 03:40:29

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்க சாலை பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் டிவி , பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், கட்டில்,பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்ததக் கடையில்  இன்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிமெண்ட் சீட்டின் மேல் கூரையைப் பிரித்து  உள்ளே சென்ற  மர்ம நபர்  பணத்தைத் தேடி கல்லாப்பெட்டியை திறந்து பார்ப்பதும், அதில்  பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்த எலக்ட்ரானிக்ஸ்  பொருட்களை அடித்து உதைத்து சேதப்படுத்தியதும் அக்கடையின் சிசிடிவி  காமெராவில் பதிவானது.

.இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த உரிமையாளர் உள்ளே இருந்த பொருட்கள் சேதமடைந்து கிடப்பதையும், கடையின் மேற்கூரை துளையிடப்பட்டிருப்பதையும்  பார்த்து அதிர்ச்சி அடைந்தார்இது குறித்து தகவலறிந்த வீரப்பன் சத்திரம் போலீஸார் அங்கு வந்து கடையின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 40 வயதுடைய ஒரு நபர் முக கவசம் அணிந்து கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே குதிப்பதும், கல்லாப்பெட்டியில் பணமில்லாத ஆத்திரத்தில் பொருட்களை அடித்து உதைத்து சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்து தெரியவந்தது.

 இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீஸார்  கடைக்குள் வந்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். ஏற்கெனவே இந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் இதை போன்று 2  முறை மர்மநபர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சித்ததும், அப்போதும் இதே போல பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி சென்ற சம்பவமும்  நடந்தது  குறிப்பிடத்தக்கது.

Top