logo
ஈரோடு மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல்  ரேஷன்அட்டைகளுக்கு மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாய் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் ரேஷன்அட்டைகளுக்கு மளிகை பொருட்களும் 2 ஆயிரம் ரூபாய் விநியோகம்

06/Jun/2021 07:36:56

ஈரோடு, ஜூன்: தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வரும் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து  2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பை ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Top