logo
ஈரோடு ரிங்ரோடு அருகே கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை சேதமடைந்து வீணாகும் பாசன நீர்

ஈரோடு ரிங்ரோடு அருகே கீழ்பவானி கிளை வாய்க்காலின் மண் கரை சேதமடைந்து வீணாகும் பாசன நீர்

30/Sep/2020 10:58:16

ஈரோடு,பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2.300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கீழ்பவானி அதன் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தற்போது உழவுப்பணிகளில்  விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு ஆனைக்கல்பாளையம், ரிங் ரோடு அடுத்த லக்காபுரத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின்  கிளை வாய்க்கால் செல்கிறது. தற்போது தண்ணீர் திறப்பால் இந்த கிளை வாய்க்காலில்  தண்ணீர் அதிகமாக செல்கிறதுஇந்தக் கிளை வாய்க்காலின் மண் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் சாலையோரமாக ஆறு போல்  பெருக்கெடுத்து ஓடி  வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயப்பணிகளுக்கு தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டுமென அரசு கூறிவரும் நிலையில் இது போன்ற உடைப்பால் தண்ணீர் வீணாவதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்பொதுப்பணித் துறையினர் உடனடியாக கரை உடைப்பை  சீரமைக்க  வேண்டும் என்றும்  விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Top