05/Jun/2021 01:25:09
சென்னை, ஜூன்: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைக் கருதியே சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமென்றும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-ஆவது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக்
கடமை தமிழ்நாட்டிற்கு
எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து
நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத்
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்திட உறுதி
பூண்டுள்ளது. இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில்
உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும்.