logo
தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

30/Sep/2020 06:19:21

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கை:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூடடத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையளவு:வடபுதுப்பட்டு, வேப்பூர் தலா 130 மிமீ மழையும், காட்டுமயிலூர் 120மிமீ மழையும், கலசப்பாக்கம் தலா 90மிமீ மழையும், காவேரிப்பாக்கம், கோபிசெட்டிபாளையம், ஆம்பூர், சேத்துப்பட்டு தலா 80மிமீ மழையும், வாணியம்பாடி, மைலம்பட்டி, சீகூர், வெம்பாக்கம் தலா 70மிமீ  மழையும் பதிவாகியுள்ளது.

Top