logo
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் பிரேதத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் பிரேதத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

01/Jun/2021 08:24:50

புதுக்கோட்டை, ஜூன்: சவுதி அரேபியாவில் உயிரிழந்த  ரவிச்சந்திரனின் உடலை சொந்த ஊரான புதுக்கோட்டை  மாவட்டத்திற்கு கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது   மனைவி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடி கலிபுல்லா, நகரைச் சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்

ரவிச்சந்திரனுக்கும் அகிலாவுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி மதியம் சவுதி அரேபியாவில் இருந்து அகிலாவிற்கு ஒரு போன் வந்துள்ளது அதில் உங்களது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வந்ததை கேட்டு அகிலா அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சவுதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம். ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடிக்கு கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கண்கள் கலங்கியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும்  வறுமையால் வாடி வரும் தனது குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகளின் நிவாரண உதவித் தொகையை பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வேண்டிக்கொண்டார்.

Top