logo
ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

29/Dec/2020 09:58:13

ஈரோடு, டிச: ஈரோடு மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலன் என்ற பாலமுருகன்(42). தறிப்பட்டறை தொழிலாளி. திருமணமாகவில்லை. இவர் அம்மாவுடன் வசித்து வந்தார். பாலமுருகனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் தினமும் மது அருந்துவது வழக்கம்.

 இந்நிலையில் 2  நாள்களுக்கு முன்  ஈரோடு சூளையில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, டாஸ்மாக் கடை எதிரே உள்ள ரோட்டோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு மயங்கி விழுந்தார். இதையடுத்து நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பாலமுருகனை எழுப்ப முயன்றபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

 தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 


Top