29/May/2021 09:59:56
புதுக்கோட்டை, மே: கொரோனா முழு முடக்கத்தால் உணவு கிடைக்காத முன் களப்பணியாளர்கள், நலிந்தோருக்கு புதுக்கோட்டையில் உள்ளதொண்டு நிறுவனம் உணவளித்து மனித நேயப்பணியாற்றி வருகிறது.
தன்னை தொடர்பு கொண்டு உதவி கேட்கும் கோரோனா நோயாளிகளின் வீட்டிற்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுப்பது அவர்களின் வீட்டிற்கு சாப்பாடு பொட்டலங்கள் கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
இதையடுத்து மறுநாளில் இருந்து அங்கிருந்தவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஸ்பான்சர் மூலமாகவும் தனது ஜோமன் பவுண்டேஷன் மூலமாக இலவசமாக மதியஉணவு அளிப்பதை ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து செய்தார். அதே போல் இந்த ஆண்டும் கொரோனா முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் இலவச மதியஉணவு அளித்து வருகிறார்.
பத்திரிகை துறையில் இருந்த ஜோ. டெய்சிராணி ப்ரீலேன்ஸராக இருந்துகொண்டு, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் தனது ஜோமன் பவுன்டேஷன் மூலம் புற்றுநோயாளிகளின் குடும்பத்திற்கு உணவு, மருத்துவம், அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி என்று தன்னால் முடிந்த உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
சிறுநீரகம் செயலிழந்தோர், சிறுவயதில் விபத்தால் முதுகுதண்டு பாதித்து
படுக்கையில் இருப்பவர்கள் என இவரால் பயன் பெறும் நோயாளிகள் பலர் மாவட்டம் முழுவதும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.