logo
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை

19/May/2021 08:39:42

புதுக்கோட்டை. மே: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர்  .ஸ்ரீதர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு  அனுப்பியுள்ள  கோரிக்கை  மனு விவரம்:

புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ஆம் வீதியைச் சேர்ந்த  ராஜேந்திரன் மனைவி நாகஜோதி(41). கணவனை இழந்த இவர் கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி காமராஜபுரம் 16-ஆம் வீதியில் கட்டிட வேலை செய்து வந்தபோது தாழ்வாகச் சென்ற மின்கம்பி தாக்கி படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த 17-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணேஷ் நகர் காவலத்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை இழந்த நாகஜோதி தனது வருமானத்தில்தான் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தக்கொண்டே  குடும்பத்தையும் நடத்தி வந்தார்இந்நிலையில், தாய், தந்தையை இழந்த  3 குழந்தைகளும்  வாழ்வதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Top