logo
கொடுத்த வாக்குறுதியையும் கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றியது அதிமுக அரசு மட்டும்தான் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கொடுத்த வாக்குறுதியையும் கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றியது அதிமுக அரசு மட்டும்தான் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

16/Mar/2021 10:17:52

புதுக்கோட்டை, மார்ச்: கொடுத்த வாக்குறுதியையும் கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றியது அதிமுக அரசு மட்டும்தான் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு வாக்கு சேகரித்து மேலும் முதல்வர் பழனிசாமி மேலும் பேசியதாவது: மிகவும் வறண்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் வளம் பெறும் வகையில் 14 ஆயிரம் கோடியில் காவிரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு விராலிமலை தொகுதி  குன்னத்தூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை நீர் மேலாண்மையில் 14 ஆயிரம் கோடியில் எந்தத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இப்பகுதி வாழையும், மஞ்சளும், கரும்பும் வளரும் செழிப்பான பகுதியாக மாறும். அதிமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில்  நிவாரணத்தொகை அளிக்கப்பட்டது.

அதே போல அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடக்கூடிய பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரூ2,500 ரொக்கம் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது. இது  வாக்குறுதி அளிக்காத திட்டம். ஆனால், திமுக அரசு பொங்கலுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் சிரமத்தை உணர்ந்து செயல்படும் அரசு அதிமுக மட்டும்தான்.

விராலிமலை முருகன்கோயிலுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விராலிமலை தொகுதியில்  எண்ணிலடங்காத பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது  மக்கள் நல அரசு என்பதற்கான சாட்சியாக உங்கள் கண்முன்னே நிற்கிறது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில், விராலிமலை வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடனிருந்தார்.


Top