logo
ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

19/May/2021 06:15:41

ஈரோடு, மே: ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

 ஈரோடு உணர்வுகள்  அமைப்பின் சார்பில் ஈரோடு  மாநகரில்  தங்குவதற்கு  வீடு இல்லாமல் , உற்றார் உறவினர் இல்லாமல் சாலையோரம் வாழ்ந்து  கொண்டிருக்கும் உள்ள சுமார் 400 ஆதரவற்றவர்களுக்கு   தக்காளி சாதம், முட்டை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உணர்வுகள் அமைப்பின் நிறுவன தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்  தலைவருமான டாக்டர் மக்கள் ஜி ராஜன்  புதன்கிழமை வழங்கினார்.

 மேலும், உணர்வுகள் அமைப்பின்  நிர்வாகிகள் அபு கிருஷ் பூபதி சுஜித், சரஸ்வதி சச்சின், அருள் கௌதம், ஹக்கீம், டேவிட் கிஷோர், புவனேஷ், நவீன், கேசவன், ஹாசன் உள்ளிட்டோர்  ஆதரவற்ற மக்களுக்கு  தினமும்  நேரில் சென்று உணவு வழங்கும் பணியினை செய்து வருகின்றனர்ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் அபிலாஷ், துணை இயக்குனர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Top