01/May/2021 05:17:40
ஈரோடு, ஏப்: அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் தொடங்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா தாக்கம் தினசரி அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் நோய் தொற்று பாதித்தவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டாயமாகவும் பெரிதளவிலும் பயன்படுத்துவதால் கள்ள சந்தையில் வியாபாரம் செய்யப்படுவதாகவும். பெரிய அளவில் தட்டுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.