logo
ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை இல்லையா? சுகாதார அமைச்சர் அறிக்கையால் அதிர்ச்சி : ப.சிதம்பரம்  விமர்சனம்

ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை இல்லையா? சுகாதார அமைச்சர் அறிக்கையால் அதிர்ச்சி : ப.சிதம்பரம் விமர்சனம்

28/Apr/2021 08:44:01

மத்திய சுகாதார துறை அமைச்சரின் அறிக்கையால் திகைத்துப் போனதாக முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

 இது குறித்து அவரது டுவிட்டர்  பதிவில்: ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்ற மத்திய சுகாதார அமைச்சரின் அறிக்கையால் தாம் திகைத்து விட்டதாகவும் இதேபோல், தடுப்பூசிகளுக்கு பஞ்சமில்லை என .பி. முதலமைச்சர் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியளிப்பதாக, தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போலி காட்சிகளை ஒளி பரப்புகின்றனவா. செய்தித்தாளில் கூறப்பட்டது அனைத்தும் தவறானதா.மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ள .சிதம்பரம்,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா.காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போலியானதா என்றும் இந்திய மக்கள் அனைவரும் முட்டாள் என்று கருதும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும்  .சிதம்பரம் கூறியுள்ளார்.

Top