28/Apr/2021 08:44:01
மத்திய சுகாதார துறை அமைச்சரின் அறிக்கையால் திகைத்துப் போனதாக
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போலி காட்சிகளை ஒளி பரப்புகின்றனவா. செய்தித்தாளில் கூறப்பட்டது அனைத்தும் தவறானதா.மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா என சரமாரி கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம்,
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா.காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போலியானதா என்றும் இந்திய மக்கள் அனைவரும் முட்டாள் என்று கருதும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.