26/Apr/2021 11:05:13
புதுக்கோட்டை, ஏப்.26: புதுக்கோட்டை மச்சுவாடி ஸ்ரீ குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு நடந்த விழாவில்
பக்தர்கள் பறவைக்காவடி,பால்குடம், அக்னி சட்டி ,கரும்பு தொட்டி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். எளிய முறையில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலோடு நடைபெற்றது .